Friday, December 22, 2006

ஹிட்லர் - செய்தொழுகும் வெங்கோலன்

கிம் பேகர் என்ற பத்திரிக்கையாளர் சிக்காகோ ட்ரிபியூனில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

இந்தியர்கள், இந்துக்கள் மேல் படுபயங்கர காழ்ப்பு உள்ளவனால் மட்டுமே அப்படி எழுதியிருக்க முடியும்.


It's not clear why Hitler is popular in some circles. Some experts say it's because of a belief that Indians were the original Aryan race. Others say it's because Hitler used the traditional Hindu good-luck symbol of the swastika, rotating it slightly. Those who believe strongly in the caste system of India also may like Hitler's eugenics and race beliefs.


இந்தியாவில் ஹிட்லர் மிகவும் பாப்புலராம். இருக்கலாம். அதற்கு இந்துக்கள் (முக்கியமாக இந்து அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்தப்படுபவர்கள்) தான் காரணமாம். ஹிட்லர் ஸ்வஸ்திகாவை திருடிக் கொண்டதும் அதைத் திருப்பிப் போட்டு இனப்படுகொலையில் ஈடுபட்டதும் தெரிந்தது. அதற்காக இந்துக்கள் ஹிட்லரை விரும்புபவர் அல்லர்.

ஹிட்லரின் ஆரிய இன கோட்பாடு எவ்வாறு இந்தியர்களைத் துண்டாடியது எனன்பது வலைப்பதிவு வரை வந்துவிட்டது. அதை கிழி கிழி என்றும் கிழித்தாகிவிட்டது இன்னும் இந்தியர்கள் அதை நம்பி ஹிட்லரைப் புக்ழ்கின்றனராம். (சில மடையர்கள் இருந்தால் பெரும்பான்மையோர் அப்படி இல்லை). இந்த வெள்ளைத்தோல் நீலக்கண் ஆரியக் கொள்கை இந்தியர்களின் மனவளர்ச்சியை குன்றச்செய்ய வெள்ளைக்கார பிரித்தானியர்கள் போட்ட திட்டம். அதில் இந்தியர்கள் பெருமையாக நினைக்கக் கூடிய எந்த விஷயத்தையும் வெளியாட்களினால் தான் நடந்தது என்ற எண்ணத்தை உருவாக்கவே வகுக்கப் பட்ட கோட்பாடு.

ஹிட்லருக்கு இந்தியர்கள் மேல் பாசம் இருந்ததாக எங்குமே படித்ததில்லை. வாய்ப்பு கிடைத்திருந்தால் யூதர்களைப் போட்டுத்தள்ளியது போல் இந்தியர்களையும் சுத்திகரிப்பு செய்திருப்பான். செய்தான் என்பது வேறு விஷயம். ஹிட்லரின் ஜெர்மனியில் ஜிப்சீக்கள், ரோமா போன்ற இந்திய வம்சாவழி வந்த நாடோடிகள் துரத்தப்பட்டு கொல்லப்பட்டது கிம் பேகர் அறியாமலா இருக்கிறார் ?

வாஜ்பயீ பிரதமாராக இருந்தபோது இந்திய வம்சாவழி நாடோடிகளை "வீட்டிற்கு திரும்புமாரு" அழைப்பும் விடுத்தவர்.

பால்தாக்கரே போன்ற சிலர் ஹிட்லரை புகழ்ந்து சில இடங்களில் பேசியிருக்கிறார் என்பதற்காக ஒட்டு மொத்த இந்துக்களை ஹிட்லரின் அடிவருடிகளாக சித்தரிப்பது கேவலமான விஷயம்.

Those who believe strongly in the caste system of India also may like Hitler's eugenics and race beliefs போன்ற வார்த்தைகள் முட்டாள்களால் மட்டுமே சொல்லமுடியும். சாதி பற்றி என்ன தெரியும் இந்த ஆளுக்கு ?

இந்தியாவின் சாதி போர்துகீசிய casta விலிருந்து வரும் caste சொல்லுக்கு சற்றும் பொருத்தமில்லாதது. இதுபோன்ற அடிப்படை தவறுகளை வெள்ளைக்காரனுக்கு விற்பதால் இந்தியா பற்றிய, மற்றும் இந்திய இந்துக்களைப் பற்றி முக்கியமாக politically active assertive இந்துக்களைப் பற்றி பிரபலமான தவறான அபிப்பிராயத்தை வலுப்பெறச் செய்கிறார்.



In Gujarat, textbooks have praised Hitler's leadership abilities, fascism and the Nazi movement. Until recently, state social studies textbooks have featured chapters on "Hitler, the Supremo" and "Internal Achievements of Nazism." The textbooks have been changed slightly this year but still barely mention the Holocaust.

This is the same state where Hindu-led riots led to the deaths of more than 1,000 Muslims in the spring of 2002. Several investigations blamed the state government, led by a Hindu-right political party, for permitting the riots.


குஜராத்தின் புத்தகத்தில் ஹிட்லரைப் புகழ்கிறதாம். அதற்கும் கோத்ரா கலவரத்திற்கும் தெளிவாக முடிச்சு போடுவதனால் முஸ்லீம்களை நல்லவர்களாக சித்தரிக்க நினைக்கிறார்.

கோத்ராவில் நடந்த விஷயம், அமேரிக்காவிலோ இங்கிலாந்திலோ, கிருத்தவர்களை ரயில் பெட்டியில் வைத்துக் கொழுத்தியிருந்தால் முஸ்லீம்கள் கதி என்னவாகியிருக்கும் ?

சுருக்கமாகச் சொன்னால், ஹிட்லரின் இனவாதக்கொள்கை ஐரோப்பாவின் சிக்கல். அதில் இந்தியர்கள் பங்கு சுத்தமாக இல்லை. யூத வெறுப்பு என்பது ஐரோப்பாவில் பரவலாக ஹிட்லருக்கு முந்தியும் இருந்துவந்துள்ளது இப்போதும் இருக்கிறது. இந்தியாவில் யூதர்கள் மிகவும் கண்ணியமாக சுயமரியாதையுடன் வாழ்கின்றனர். யூதர்களுக்கும் இந்துக்களுக்கும் என்றுமே பிரச்சனையே இருந்ததில்லை.


Hitler's autobiography, "Mein Kampf," flies off the shelves of many bookstores. The Bandra branch of Crossword, a major bookstore chain in the Mumbai area, sells 35 copies a week.


ஹிட்லரின் "மெயின் கெம்ஃப்" எந்த நாட்டில் அதிகம் விற்கிறது ?

Hitler book bestseller

Friday, December 01, 2006

எங்கே ஐலைய்யா ?

2006 செப்டெம்பர் 29 ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஊர் முன்னிலையில் அவமானப் படுத்தப் பட்டு அதில் 18 வயது பெண்ணை மானபங்கப் படுத்தி வண்புணர்ச்சி செய்திருக்கின்றனர் எல்லாம் ஊர் கூடி நின்று வெடிக்கை பார்த்து கை கொட்டி அந்தக் கொடிய மிருகங்களை உர்ச்சாகப் படுத்தியுள்ளனர். கைர்லாஞ்சி கிராமத்தில் நடந்த இந்த கோர சம்பவம் ஒரு தேசிய அவமானம். இந்த சம்பவம் தேசிய அளவில் பல அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஸ்ஹ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் அதன் விளைவுகள் தெரிய ஆரம்பித்து விட்டன.

இதன் முக்கிய காரணம், அந்த குடும்பத்தினர் தலித் இனத்தவர்கள்.

இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியவர்கள் "மேல் சாதி" என்று சொல்லிக் கொள்ளும் OBC க்கள்.

தலித் intellectual சந்திரபன் பிரசாத் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

Return of the Dalit panther


Amid cheers from the Kunbi men, women and children, the mother and daughter were first stripped. While they were being raped for about an hour, the Kunbi elders stood to give the culprits a standing ovation.

Did such things happen in Hitler's regime? In full public view, four people were butchered. This is India's social holocaust, where dominant Kunbis, a listed OBC caste inflicted humiliation while killing.

Atrocities on Dalits follow a pattern, often of a pan-India nature. Most Dalit killings are accompanied by inflicting humiliations. For instance, if the caste society decides to rape a Dalit woman, or target her dignity, attempts are made that more and more people came to know of it. That's the reason a rape is preceded by stripping the victim. Sometimes, there will be no physical injury, only humiliation. The idea is to convey a message - that, Dalits ought to know their social positioning. The Khairlanji medievalism is just one case in point. Such acts of barbarism are common all over India and it is just that this savagery caught the media attention and we are shocked.


OBC க்கள் தலித்துக்கள் மேல் கட்டவிழ்த்துவிடும் வன்முறையை Social holocaust என்று சொல்கிறார்.

ஒரு விதத்தில் இது உண்மையே.

இந்த அதி தீவிர "இந்து எதிர்ப்பு வலைத்தளத்தில்" முக்கியமாக இலங்கை தமிழர்களை எதிர்க்கும் பௌத்த வலைதளத்தில் படங்கள் போட்டிருக்கிறார்கள். படங்கள் கோரமானவை. மன முதிர்ச்சி உடையவர்கள் மட்டுமே பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது வரை, தலித் விடுதலை என்றெல்லாம் பேசும் அறிவு சீவிகளிடமிருந்து ஒரு பேச்சுகூட இல்லை இதைப் பற்றி.

1. எங்கே, கஞ்சன் ஐலைய்யா ?

2. தலித்-பஹுஜன் (பஹுஜன் என்பது OBC க்களைக் குறிக்கும் சொல்) கூட்டு என்றெல்லாம் பேசிய இந்த அறிவாளி, தலித்-பஹுஜன் இணைந்து பிராமணர்களைக் கேள்வி கேட்கவேண்டும் என்று சொல்லியவர் இப்போது எங்கே ?

3. இந்த குற்றவாளிகளுக்கும் தூக்கு வழங்கக் கூடாது என்று சொல்பவர்கள் நம் அறிவு சீவிக் கூட்டத்தில் இருக்கலாம், தப்பில்லை, இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால் இவர்கள் முட்டாள் தனத்தின் அளவு தன் நிகரில்லாக் கீழ் நிலையைத் தொடும் என்றால் அது இவர்கள் பேசும் இது போன்ற பேச்சில் தான். சந்தோஷ் சிங்கிற்கு தூக்கு வழங்குவது பற்றி பேச்சு மூச்சில்லை, ஆனால் அஃப்சலுக்கு என்றவுடன் இவர்கள் கொடி தூக்கியதும், தர்ணா செய்ததும் இதன் அடிப்படையில் பார்க்கையில், இவர்களைப் பார்த்து காரித் துப்பவேண்டும் என்று தோன்றுகின்றது.

4. இது காங்கிரஸ் ஆளும் மஹராஷ்டிரத்தில் நடந்த விஷயம், இதே பா.ஜ.க ஆளும் குஜராத்தில் நடந்திருந்தால் ?

5. எங்கே டீஸ்டா செடல்வாத், ஷபானா ஆஸ்மி மற்றும் இவர்கள் அடி வருடிகளான NGO ராஸ்கல்கள் ?