Saturday, November 25, 2006

வலைப்பதிவுகளில் நக்ஸலைட்கள்

இந்துஸ்தான் டைம்ஸில் வந்த இந்தச் செய்தியில் நக்ஸலைட்டுகள் வலைப்பதிவில் காலூன்றியதால் நக்சலைட்டுகளை ஒடுக்க அமைக்கப் பட்டப் போலீசாரும் வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து internet ல் போர் செய்கிறார்களாம்.

நக்ஸலைட்டுகள் தங்கள் கொள்கையை வலைப்பதிவேற்றி வலையில் பிரச்சாரம் செய்கின்ற அளவுக்குப் போய்விட்டார்கள்.

நக்சலைட்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க மாவோயிச புரட்சி செய்ய ஆசையிருந்தால் இதோ இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும். செல்பவர்கள் மீண்டும் இங்கே வரவேண்டாம். நக்சலைட்டுகளின் ஆதரவாளன் என்றால் என் அகராதியில் தலை நசுக்கப் படவேண்டிய நச்சுப் பாம்பு என்றே பொருள்.

போலீசாராலோ அல்லது அனானியாகவோ இயக்கப் படும் இந்த தளம் நக்ஸல் எதிரி தளம்.

இந்த நக்ஸல்வாத இயக்கத்தின் எதிரி தளத்தில் ASHA மற்றும் AID இந்தியா வை குறிவைத்தும் ஒரு சுட்டி இருக்கிறது. IIT ன் முன்னாள் மாணவரான திரு. சந்தீப் பாண்டே படம் போட்டு நக்ஸலைட்டுகளுக்கு உதவுபவர் என்றும் கூறியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் சூனாமியின் போது இது போல் AID மற்றும் ASHA போன்ற (NGO) எஞ்சி ஓ (எஞ்சியிருக்கும் ஒற்றர்களோ!?) க்களுக்கு பண உதவி செய்திருப்பின் அது நிச்சயம் நக்சலைட்டுகளுக்குச் சென்றிருக்கும் என்பது இவர்களது கூற்று.

Saturday, November 11, 2006

போலிகளிடமிருந்து இடது சாரிகளைக் காப்பாற்றுங்கள்

திண்ணையில் திரு. அருணகிரி எழுதிய இந்த கட்டுரை மிகவும் ஆழமான எண்ணத்தை தூண்டிவிட்டதால் இதனை இங்கே பதிகிறேன்.

இடது சாரி இந்துத்வம்

இதுவரை இந்துத்வா கொள்கை என்பது ஏதோ ஒரு அரசியல் கொள்கை அவ்வளவே என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் அருணகிரியின் இந்த கட்டுரையின் அர்த்தத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டுள்ளேன் என்றால் உண்மையான இடது சாரிகள் இடது சாரிகள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்களில் இல்லாமல் போய்க் கொண்டிருப்பதாகவே தோன்ற அரம்பித்துவிட்டது.

இடது சாரிகள் என்றாலே கேவலமான ஜந்துக்கள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த எண்ணம் மாறிவருகிறது. இவர்கள் உண்மையான இடது சாரிகள் அல்லர். சும்மா பதவிக்காக வேஷம் போடும் வெளிவேசக்காரர்கள் என்ற எண்ணம் தோன்ற அரம்பித்துவிட்டது.

உண்மையான இடது சாரிகள் இடது சாரி சிந்தனையை காக்கவேண்டும் என்ற அவசியத்தை திரு. அருணகிரி சொல்லியிருக்கிறார்.


உண்மையான இடதுசாரித்தனத்தை இடதுசாரிகளிடமிருந்து காப்பதும் மீட்பதும் இந்துத்துவத்தின் இன்றைய தலையாய கடமையாகும்.


இந்த நிலைக்கு இந்திய இடது சாரிச் சிந்தனையாளர்கள் செல்ல என்ன காரணம் என்பதை எல்லோரும் அறிவர். இந்த இடது சாரி சிந்தனையை இந்துத்வா சிந்தனையாளர்கள் மீட்பதில் வெற்றியடைந்தாலொழிய போலி இடது சாரிகளுக்கு இன்று இருக்கும் Political space மற்றும் அரசியல் செல்வாக்கை காலி செய்ய முடியாது என்றே தோன்றுகிறது.