Friday, December 22, 2006

ஹிட்லர் - செய்தொழுகும் வெங்கோலன்

கிம் பேகர் என்ற பத்திரிக்கையாளர் சிக்காகோ ட்ரிபியூனில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

இந்தியர்கள், இந்துக்கள் மேல் படுபயங்கர காழ்ப்பு உள்ளவனால் மட்டுமே அப்படி எழுதியிருக்க முடியும்.


It's not clear why Hitler is popular in some circles. Some experts say it's because of a belief that Indians were the original Aryan race. Others say it's because Hitler used the traditional Hindu good-luck symbol of the swastika, rotating it slightly. Those who believe strongly in the caste system of India also may like Hitler's eugenics and race beliefs.


இந்தியாவில் ஹிட்லர் மிகவும் பாப்புலராம். இருக்கலாம். அதற்கு இந்துக்கள் (முக்கியமாக இந்து அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்தப்படுபவர்கள்) தான் காரணமாம். ஹிட்லர் ஸ்வஸ்திகாவை திருடிக் கொண்டதும் அதைத் திருப்பிப் போட்டு இனப்படுகொலையில் ஈடுபட்டதும் தெரிந்தது. அதற்காக இந்துக்கள் ஹிட்லரை விரும்புபவர் அல்லர்.

ஹிட்லரின் ஆரிய இன கோட்பாடு எவ்வாறு இந்தியர்களைத் துண்டாடியது எனன்பது வலைப்பதிவு வரை வந்துவிட்டது. அதை கிழி கிழி என்றும் கிழித்தாகிவிட்டது இன்னும் இந்தியர்கள் அதை நம்பி ஹிட்லரைப் புக்ழ்கின்றனராம். (சில மடையர்கள் இருந்தால் பெரும்பான்மையோர் அப்படி இல்லை). இந்த வெள்ளைத்தோல் நீலக்கண் ஆரியக் கொள்கை இந்தியர்களின் மனவளர்ச்சியை குன்றச்செய்ய வெள்ளைக்கார பிரித்தானியர்கள் போட்ட திட்டம். அதில் இந்தியர்கள் பெருமையாக நினைக்கக் கூடிய எந்த விஷயத்தையும் வெளியாட்களினால் தான் நடந்தது என்ற எண்ணத்தை உருவாக்கவே வகுக்கப் பட்ட கோட்பாடு.

ஹிட்லருக்கு இந்தியர்கள் மேல் பாசம் இருந்ததாக எங்குமே படித்ததில்லை. வாய்ப்பு கிடைத்திருந்தால் யூதர்களைப் போட்டுத்தள்ளியது போல் இந்தியர்களையும் சுத்திகரிப்பு செய்திருப்பான். செய்தான் என்பது வேறு விஷயம். ஹிட்லரின் ஜெர்மனியில் ஜிப்சீக்கள், ரோமா போன்ற இந்திய வம்சாவழி வந்த நாடோடிகள் துரத்தப்பட்டு கொல்லப்பட்டது கிம் பேகர் அறியாமலா இருக்கிறார் ?

வாஜ்பயீ பிரதமாராக இருந்தபோது இந்திய வம்சாவழி நாடோடிகளை "வீட்டிற்கு திரும்புமாரு" அழைப்பும் விடுத்தவர்.

பால்தாக்கரே போன்ற சிலர் ஹிட்லரை புகழ்ந்து சில இடங்களில் பேசியிருக்கிறார் என்பதற்காக ஒட்டு மொத்த இந்துக்களை ஹிட்லரின் அடிவருடிகளாக சித்தரிப்பது கேவலமான விஷயம்.

Those who believe strongly in the caste system of India also may like Hitler's eugenics and race beliefs போன்ற வார்த்தைகள் முட்டாள்களால் மட்டுமே சொல்லமுடியும். சாதி பற்றி என்ன தெரியும் இந்த ஆளுக்கு ?

இந்தியாவின் சாதி போர்துகீசிய casta விலிருந்து வரும் caste சொல்லுக்கு சற்றும் பொருத்தமில்லாதது. இதுபோன்ற அடிப்படை தவறுகளை வெள்ளைக்காரனுக்கு விற்பதால் இந்தியா பற்றிய, மற்றும் இந்திய இந்துக்களைப் பற்றி முக்கியமாக politically active assertive இந்துக்களைப் பற்றி பிரபலமான தவறான அபிப்பிராயத்தை வலுப்பெறச் செய்கிறார்.



In Gujarat, textbooks have praised Hitler's leadership abilities, fascism and the Nazi movement. Until recently, state social studies textbooks have featured chapters on "Hitler, the Supremo" and "Internal Achievements of Nazism." The textbooks have been changed slightly this year but still barely mention the Holocaust.

This is the same state where Hindu-led riots led to the deaths of more than 1,000 Muslims in the spring of 2002. Several investigations blamed the state government, led by a Hindu-right political party, for permitting the riots.


குஜராத்தின் புத்தகத்தில் ஹிட்லரைப் புகழ்கிறதாம். அதற்கும் கோத்ரா கலவரத்திற்கும் தெளிவாக முடிச்சு போடுவதனால் முஸ்லீம்களை நல்லவர்களாக சித்தரிக்க நினைக்கிறார்.

கோத்ராவில் நடந்த விஷயம், அமேரிக்காவிலோ இங்கிலாந்திலோ, கிருத்தவர்களை ரயில் பெட்டியில் வைத்துக் கொழுத்தியிருந்தால் முஸ்லீம்கள் கதி என்னவாகியிருக்கும் ?

சுருக்கமாகச் சொன்னால், ஹிட்லரின் இனவாதக்கொள்கை ஐரோப்பாவின் சிக்கல். அதில் இந்தியர்கள் பங்கு சுத்தமாக இல்லை. யூத வெறுப்பு என்பது ஐரோப்பாவில் பரவலாக ஹிட்லருக்கு முந்தியும் இருந்துவந்துள்ளது இப்போதும் இருக்கிறது. இந்தியாவில் யூதர்கள் மிகவும் கண்ணியமாக சுயமரியாதையுடன் வாழ்கின்றனர். யூதர்களுக்கும் இந்துக்களுக்கும் என்றுமே பிரச்சனையே இருந்ததில்லை.


Hitler's autobiography, "Mein Kampf," flies off the shelves of many bookstores. The Bandra branch of Crossword, a major bookstore chain in the Mumbai area, sells 35 copies a week.


ஹிட்லரின் "மெயின் கெம்ஃப்" எந்த நாட்டில் அதிகம் விற்கிறது ?

Hitler book bestseller

7 comments:

Anonymous said...

// பால்தாக்கரே போன்ற சிலர் ஹிட்லரை புகழ்ந்து சில இடங்களில் பேசியிருக்கிறார் என்பதற்காக ஒட்டு மொத்த இந்துக்களை ஹிட்லரின் அடிவருடிகளாக சித்தரிப்பது கேவலமான விஷயம். //

:))))))

Once again, dont try to bring 'ஒட்டு மொத்த இந்துக்களை' for playing your 'We are all one (ONLY for outsiders)' concept.

I read this one. And the author very clearly likens the so called upper caste in india (who else - other than 'PAAPPAAN') to barbaric hitlor ideology.

Dont you know how the RSS 'saga' stupids follow the same style to take oath and other customs just like hitlor did?

It is your freedom to defend your PAARPAAN race. We dont care about it.
But dont play the 'ஒட்டு மொத்த இந்துக்களை' Sheep and Fox story when needed.

Leave the rest of us to live in peace and dignity.

வஜ்ரா said...

பொட்டீ,

ஹிட்லரின் ஆரிய வந்தேறிக்கோட்பாட்டை வைத்துக்கொண்டு யார் அரசியல் ஜல்லி அடிப்பது என்பது நான் தனியாகச் சொல்லத் தேவையில்லை.

யாரும் இங்கே பார்ப்பான இனம் என்று சொல்லவில்லை. அதைச் சொல்பவர்கள் நீங்களே. (அல்லது உங்களைப் போன்ற செஞ்சட்டை அட்டைகள்).

//
Leave the rest of us to live in peace and dignity.
//

What moral right do you have to talk about dignity and peace ?

மாயவரத்தான் said...
This comment has been removed by a blog administrator.
வஜ்ரா said...

மாயவரத்தான் சார்,

உங்கள் பதில் கிடைத்தது. அதை ஏற்கிறேன்.

rajakalirajan said...

சுறுக்கமாகச்

first check your spelling in tami, after that only you scold Mr. Hitler, you do not have any rights to speak about Mr. Hitler

by Hitler fan in India

வஜ்ரா said...

Raja "Nazi" Rajan,

error corrected.

BA 3rd Year Admit Card said...

Great article. Your blogs are unique and simple that is understood by anyone.